×

தாயுடன் கள்ளத்தொடர்பை பயன்படுத்தி 3 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்: குளிர்பான கடைக்காரர் கைது

கீழ்ப்பாக்கம்: அண்ணாநகர் கிழக்கு, ஆர்.வி.நகரை சேர்ந்த பெருமாள் (48), அதே பகுதியில் குளிர்பான கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு, அதே பகுதி வஉசி தெருவை சேர்ந்த ஷீலா (30), குளிர்பானம் குடிக்க அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஷீலா வீட்டிற்கு அவ்வப்போது சென்று பெருமாள் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, ஷீலாவின் 9 வயது மகள் மீது பெருமாளுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், ஷீலா வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஷீலாவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்ததால் தனது மகள் பாதிக்கப்பட்டதையும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, ஷீலாவின் வீட்டிற்கு  அவரது தங்கை கண்ணகி நகரை சேர்ந்த மாலா (28) என்பவர் தனது 4 வயது மகளுடன் வந்து தங்கியுள்ளார். அந்த  4 வயது சிறுமிக்கும் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்தும் மாலா கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஷீலாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த 11 வயது சிறுமியையும் மிரட்டி பெருமாள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் இதுபற்றி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை மையத்தில் முறையிட்டனர். அதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் இதுகுறித்து  கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து,  இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து, பெருமாளை நேற்று பிடித்து விசாரித்தார்.  அப்போது, 3 சிறுமிகளையும் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.  அதை தொடர்ந்து பெருமாளை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.  அவருக்கு உடந்தையாக இருந்த ஷீலாவையும்,  மாலாவையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்….

The post தாயுடன் கள்ளத்தொடர்பை பயன்படுத்தி 3 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்: குளிர்பான கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Kilpakkam ,Perumal ,RV Nagar, Annanagar East ,Dinakaran ,
× RELATED திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்